அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதே சங்களாகப் பிரித்தது தொடர்பான உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பானது, ஆட்சியாளர்களின் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு அரசமைப்புச்சட்ட நீதிமன்ற மும் சரணடைந்து விட்டது என்பதற்கு ஓர் அதிர்ச்சி யளித்திடும் எடுத்துக்காட்டாகும். நான்கு ஆண்டுகள் கழித்து, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலை மையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வாயத்தில் மூன்று பேர் ஒத்து அளித்துள்ள தீர்ப்புகள், மிகப்பெரிய அளவில் நீண்ட காலம் நீடிக்கக்கூடிய விதத்தில் விளைவுகளை ஏற்படுத்தி டும். இது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தின் ஆணி வேரையே அழித்து, மாநிலங்களின் உரிமைகளைப் பாதித்திடும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்திய ஒன்றியத்துடன் சேரும்போது அம் மாநில மக்களுக்கு அளித்திட்ட உறுதிமொழிக்குத் துரோகம் இழைக்கும் விதத்தில், குடியரசுத் தலைவரின் ஆட்சியின்போது, அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட, குடியரசுத் தலைவரின் உத்தரவை அங்கீகரித்திடும் விதத்தில் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்திருக்கிறது.
தற்காலிகமானதல்ல...
உச்சநீதிமன்றமானது, 370ஆவது பிரிவை, தற்கா லிக நடவடிக்கையே என்றும், எனவே, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு ‘தனியாக இறையாண்மை’ (‘internal sovereignty’) அளிக்க வேண்டியது இல்லை என்றும் கூறியிருப்பதன் மூலம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ஏன் அளிக்கப் பட்டது என்பதற்குள்ளாகவே செல்லாமல் அது ஒதுங் கிக்கொண்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்தது தற்காலிகமான ஒன்று அல்ல, மாறாக அன்றைய அரசமைப்புச்சட்டத்தின் கீழான அதிகாரக்குழுமத்தால் காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்பட்ட புனிதமான உறுதிமொழியின் ஒரு பகுதி (part of solemn commitment) என்பதையே உச்ச நீதிமன்றம் புறக்கணித்துள்ளது. 370ஆவது பிரிவு, ஓர் அரசமைப்புச் சட்ட உத்தரவாதமாகும். இந்த அந் தஸ்தானது ஜம்மு-காஷ்மீர் மக்களின் பிரதிநிதிக ளுடன் கலந்துபேசி அவர்களின் ஒப்புதலுடன் வரை யறுக்கப்பட்டதாகும்.
வியப்பானது! விசித்திரமானது!!
அமர்வாயத்தின் மூன்று நீதிபதிகள் சார்பில் தலைமை நீதிபதி அளித்துள்ள தீர்ப்பானது, 370 ஆவது பிரிவு என்பது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்கான ஒரு ஷரத்து என்று பார்ப்பதைக்காட்டிலும், அது ஒன்றிய அரசாங்கத் திற்கும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கும் இடையே யான அரசமைப்புச்சட்ட ஒருங்கிணைப்பை மேம்படுத் துவதை நோக்கமாகக் கொண்டது எனக்கூறி அனை வரையும் வியக்க வைத்திருக்கிறது. மேலும் அந்தத் தீர்ப்பில், குடியரசுத் தலைவர் 370(1)ஆவது பிரிவின் கீழ் தன் அதிகாரத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவது, இவ்வாறான ஒருங்கிணைப்பின் படிப்படி யான செயல் முறையைக் காட்டுவதாகவும் கூறப்பட்டி ருக்கிறது.
அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவின் வர லாறை ஆய்வு செய்தோமானால், அது குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் தொடர்ந்து துஷ்பிரயோ கம் செய்யப்பட்டு, அம்மாநிலத்தின் சுயாட்சி மறுக் கப்பட்டு வந்ததையும், மாநிலத்தின் அதிகாரங் கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வந்தி ருப்பதையுமே காட்டுகின்றன. இது எப்படி நடந்தது? ஒன்றிய அரசாங்கத்தின் நியமனம் செய்யப்படும் ஆளுநரால், குடியரசுத் தலைவரின் பல்வேறு நடவ டிக்கைகளுக்கு “ஒப்புதல்” (“concurrence”) வழங்கப் பட்டது. எனினும், இப்போது வெளிவந்துள்ள விசித்தி ரமான தீர்ப்பானது, “குடியரசுத் தலைவரால் 370(3) ஆவது பிரிவின்கீழ் வெளியிடப்பட்டுள்ள பிரகடனம், ஒருமைப்பாடு செயல்முறையின் உச்சகட்டமாகும்” என்றும், “அதன்காரணமாக அது ஒரு சரியான அதி காரப் பிரயோகம்” என்றும் உச்சிமுகர்ந்திருக்கிறது.
சிறப்புரிமைகளைப் பெற தகுதியற்ற நிலை
இவ்வாறான காரணங்களை, கற்றறிந்த நீதிபதி கள் வெளிப்படுத்தியிருப்பதன் காரணமாக, அரச மைப்புச் சட்டத்தின் 371ஆவது பிரிவின்கீழ் சில வட கிழக்கு மாநிலங்களும் மற்றும் சில மாநிலங்களும் அனுபவித்து வரும் சிறப்பு அம்சங்கள் அல்லது உரி மைகளைக்கூட ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பெறுவத ற்குத் தகுதியற்றதாகிறது. ஜம்மு-காஷ்மீருக்கு இத்தனை ஆண்டு காலமாக ஜனநாயகம் மற்றும் சுயாட்சி மறுக்கப்பட்டு வந்ததற்கு சட்டரீதியான நியாயம் இருக்க முடியாது.
அரசமைப்புச்சட்டத்தின் 367இல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்மூலம், அரசமைப்புச்சட்ட பேரவை(constituent assembly)யாக இருந்த ஜம்மு-காஷ்மீர், இதர மாநிலங்களின் சட்டப் பேரவைகள் (legislative assemblies) போன்று மறுவரையறை செய்ததைக்கூட, சட்டத்திற்கு உட்பட்ட ஒன்றே (as ultra virus) என்று பார்த்திருப்பதன்மூலம், தீர்ப்புரை யானது மாநிலத்திற்கு 370ஆவது பிரிவின்கீழ் அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய் யப்படுவதற்கு குடியரசுத் தலைவர் வெளியிட்ட அறி விக்கையின் செல்லத்தக்க தன்மையைப் பாதிக்காது என்று சுற்றிவளைத்துச் சொல்லியிருக்கிறது.
ஆபத்தான அம்சம்
இந்தத் தீர்ப்புரையின் இதர ஆபத்தான அம்சம், அரசமைப்புச் சட்டத்தின்கீழ் இதுவரை சிறிதளவா வது இருந்துவந்த கூட்டாட்சித் தத்துவத்தின் கீழான அம்சங்களையும், மாநிலங்களின் உரிமைகளையும் தகர்த்திடும் விதத்தில் மோடி அரசாங்கம் மேற் கொண்டுவரும் எதேச்சதிகார நடவடிக்கைகளை சரி என்று ஏற்றுக்கொண்டிருப்பதாகும்.
உச்சநீதிமன்றம், 2019இல் நாடாளுமன்றம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மாநில அந்தஸ்தை அகற்றி, அதனை இரு யூனியன் பிரதேசங்களாக மாற்று வதற்காகக் கொண்டுவந்த காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் குறித்து விசாரணை செய்து தீர்ப்பளித்திட மறுத்திருக்கிறது. ஒரு மாநில அரசை, மாநில அரசின் அந்தஸ்திலிருந்து யூனியன் பிரதேசமாகத் தரமிறக்கு வதற்கு அரசமைப்புச் சட்டத்தின் 3ஆவது பிரிவைப் பயன்படுத்தியது செல்லத்தக்கதா என்று கூறுவதற்கு உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று சொலிசிட்டர் ஜெனரல் (அரசு வழக்குரைஞர்) உறுதிமொழி அளித்திருப்ப தால், இந்த விஷயத்தை ஆராயப்போவதில்லை என்று இதற்கு உச்சநீதிமன்றம் காரணம் கூறியிருக்கிறது. இவ்வாறு அரசு வழக்குரைஞர் உறுதி அளித்திருப்ப தற்கு கால நிர்ணயம் எதையும் அவர் நிர்ணயித்திட வில்லை. அதே சமயத்தில், நீதிமன்றம், லடாக் யூனியன் பிரதேசமாக அமைக்கப்பட்டிருப்பது செல்லும் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. 2024 செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ள நீதிமன்றம், ஆனால் மாநில அந்தஸ்து அதற்குமுன் அளிக்கப்பட்டுவிடுமா என்று தெரிவித்திடவில்லை.
மாநில அரசின் கருத்துக்களை கேட்டறிந்திட வேண்டும்
அரசமைப்புச்சட்டத்தின் 3ஆவது பிரிவின்படி, குடி யரசுத் தலைவர், எந்தவொரு மாநிலத்தின் எல்லையை யோ அல்லது மாநிலங்களை இணைப்பது தொடர்பா கவோ அல்லது புதியதொரு மாநிலத்தை உருவாக்கு வது தொடர்பாகவோ எந்தவொரு முன்மொழிவாக இருந்தாலும் அதன்மீது கருத்துக்களைத் தெரிவிப்ப தற்காக சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்திற்கு அனுப்பிட வேண்டும். மாநில அரசாங்கத்தின் கருத்துக் களைக் கேட்டறிந்தபின்புதான், நாடாளுமன்றம் அதன் மீது சட்டம் இயற்ற முடியும். ஜம்மு-காஷ்மீர் மாநி லத்தைப் பொறுத்தவரை அது அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவு பயன்படுத்தப்பட்டு அது 2018 நவம்ப ரில் கலைக்கப்பட்டிருந்தது. எனவே, இந்தப் பிரச்சனை தொடர்பாக கருத்துக்களைக் கேட்டறிவதற்கு அங்கே சட்டமன்றம் என்று எதுவும் இல்லை.
3ஆவது பிரிவை மீறிய செயல்
குடியரசுத் தலைவரின் கீழ் உள்ள மாநிலங்களின் விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றமே சட்டமியற்ற வேண்டும். எனவே, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதற்கான சட்டம், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப் பட்டது. இது அரசமைப்புச் சட்டத்தின் 3ஆவது பிரிவை மீறிய செயலாகும். ஏனெனில் அரசமைப்புச்சட்டத்தின் 3ஆவது பிரிவின்படி மாநில சட்டமன்றத்தின் கருத்து, அது நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தாது என்ற போதிலும்கூட, கேட்டறிந்திருக்கப்பட வேண்டும். மேலும், இதில் அடிப்படைக் கேள்வியாக அமைந்தி ருப்பது, ஒரு மாநிலத்தில் சட்டமன்றம் இல்லாத நிலையில் அந்த மாநிலம் குறித்து ஒரு சட்டத்தை நாடாளுமன்றம் இயற்ற முடியுமா என்பதாகும். இதுகுறித்து நீதிமன்றம் விசாரணை செய்து தீர்ப்பளித்திடவில்லை.
வசதி செய்து கொடுத்திருக்கும் உச்சநீதிமன்றம்
அதே சமயத்தில் லடாக் யூனியன் பிரதேசம் அமைக் கப்பட்டிருப்பது செல்லத்தக்கது என்று கூறியிருக்கி றது. இது, இதேபோன்று எதிர்காலத்தில் நடவடிக்கை கள் மேற்கொள்வதற்கு வசதி செய்து கொடுத்தி ருக்கிறது. ஓர் ஆளும் கட்சி, நாடாளுமன்றத்தில் தனக்கிருக்கும் முரட்டுத்தனமான பெரும்பான்மை யைக் கொண்டு, எந்தவொரு மாநிலத்திலும் குடி யரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம், பின்னர் அங்குள்ள சூழ்நிலையைப் பயன்படுத்தி, அங்கே ஏதேனும் ஒரு பகுதியை யூனியன் பிரதேசமாக அமைத்திட சட்டமியற்றலாம்.
பொய்த்துப் போன நம்பிக்கை
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, ஒன்றிய அரசாங்கத் தின் ஒற்றை ஆட்சி நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்து முத்திரைபதித்திருக்கிறது. இது, நாட்டின் கூட்டாட்சிக் கொள்கை மீதும், ஒன்றிய-மாநில அர சுகளின் உறவுகள் மீதும் ஆழமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்திடும். நீதியரசர் சந்திரசூட் தலைமை நீதிபதி யாகப் பொறுப்பேற்றபோது, இனி உச்சநீதிமன்றம் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் அனைத்திற்கும் தலையாட்டாது என்ற ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. ஐயகோ, அத்தகைய நம்பிக்கைகள் பொய்த்துப் போய்விட்டன.
டிசம்பர் 13, 2023,
தமிழில் : ச.வீரமணி